sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பூந்தோட்டத்தில் மீட்கப்பட்ட ராஜநாகம் வனத்தில் விடுவிப்பு

/

பூந்தோட்டத்தில் மீட்கப்பட்ட ராஜநாகம் வனத்தில் விடுவிப்பு

பூந்தோட்டத்தில் மீட்கப்பட்ட ராஜநாகம் வனத்தில் விடுவிப்பு

பூந்தோட்டத்தில் மீட்கப்பட்ட ராஜநாகம் வனத்தில் விடுவிப்பு


ADDED : அக் 07, 2024 12:28 AM

Google News

ADDED : அக் 07, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுார் அருகே தனியார் எஸ்டேட் பூந்தோட்டத்தில் பதுங்கியிருந்த, 10 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வன ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் மீட்டு அடர்ந்த வனத்தில் விடுவித்தனர்.

கூடலுார் - கோழிக்கோடு சாலை, நந்தட்டி அருகே உள்ள, தனியார் தேயிலை தோட்ட உரிமையாளரின் வீடு உள்ளது. அங்குள்ள பூந்தோட்டத்தில் நாகப்பாம்பு இருப்பதாக நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ), வனகாவலர் பக்கீஸ் ராஜ், வேட்டை தடுப்பு காவலர் கோவிந்தராஜ், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு சென்று அதனை மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us