sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ; பஸ் ஸ்டாண்ட் பணி முடிந்தால் நிம்மதி

/

அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ; பஸ் ஸ்டாண்ட் பணி முடிந்தால் நிம்மதி

அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ; பஸ் ஸ்டாண்ட் பணி முடிந்தால் நிம்மதி

அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ; பஸ் ஸ்டாண்ட் பணி முடிந்தால் நிம்மதி


ADDED : ஜன 08, 2024 10:49 PM

Google News

ADDED : ஜன 08, 2024 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட், தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, புதிய பஸ் ஸ்டாண்ட் பணியை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கூடலுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இட பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க, 4.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 2020 டிச., மாதம் பணிகள் துவங்கப்பட்டது.

தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில், நிதி பற்றாக்குறை காரணமாக, பணிமனைக்கு சாலை அமைப்பது உள்ளிட்ட சில பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த அக்., மாதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, பணிமனைக்கு சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு நடந்து வருகிறது.

பஸ் ஸ்டாண்ட் பணி முடியாத காரணத்தால், எதிரே உள்ள மைசூரு தேசிய நெடுஞ்சாலையை, அரசு பஸ்சை திருப்புவதற்கும், சாலையோரம் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனர்.

இதனால், சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநில ஓட்டுனர்கள், பயணிகள், கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஓட்டுனர்கள் கூறுகையில், 'இப்பகுதி சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. பஸ் ஸ்டாண்ட் பணிகளை முடித்தால் இப்பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us