sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சத்தி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

சத்தி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சத்தி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சத்தி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : பிப் 07, 2024 11:22 PM

Google News

ADDED : பிப் 07, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம், : கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இரண்டாவது நாளாக நடந்தது.

சரவணம்பட்டியில் துவங்கி, குரும்பபாளையம், கோவில்பாளையம், கணேசபுரம், அன்னூர் வழியாக புளியம்பட்டி வரை இருபுறமும் தலா ஐந்து அடி அகலப்படுத்தும் பணி ஒன்றரை ஆண்டுகளாக நடக்கிறது.

இந்நிலையில் அகலப்படுத்தப்பட்ட சாலை முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு நெடுஞ்சாலை துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. கோவில்பாளையத்தில் கடந்த இரண்டு நாட்களாக நெடுஞ்சாலையில் உள்ள விளம்பர பலகைகள் சிறு மேடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. நேற்று பொக்லைன் இயந்திரம் வாயிலாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,' கோவில்பாளையத்தில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கணேசபுரம் மற்றும் அன்னூரிலும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே சாலையை அகலப்படுத்தியதன் பயன் வாகன ஓட்டிகளுக்கு கிடைக்கும். விபத்துக்கள் குறையும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us