காட்டு யானையிடமிருந்து தப்பியவர் காயத்துடன் மீட்பு
காட்டு யானையிடமிருந்து தப்பியவர் காயத்துடன் மீட்பு
ADDED : பிப் 20, 2025 10:10 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்; பந்தலுார் அருகே, புத்துார் வயல் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்,57. இவர் நேற்று காலை,6:30 மணிக்கு, கூடலுார் மருத்துவமனை செல்வதற்காக நடந்து வந்துள்ளார்.
அப்போது, குந்தலாடி பஜார் பகுதியில் மக்னா யானை நடந்து வந்துள்ளது. திடீரென யானையை பார்த்த நாகராஜ், யானையிடமிருந்து தப்பி அருகில் உள்ள தோட்ட பகுதிக்குள் குதித்துள்ளார்.
அதில், காயம் ஏற்பட்டது. அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், அவரை மீட்டு பந்தலுார் அரசு மருத்துவமனை அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர்.
