ADDED : நவ 21, 2025 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: ஊட்டியில் இ.கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊட்டி ஏ.டி.சி.,யில் இ.கம்யூ., கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு சி.பி.ஐ., மாவட்ட தலைவர் போஜராஜன் தலைமை வகித்தார்.ரகுநாதன் முன்னிலைவகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை தாக்குதலை தடுத்து நிறுத்த கோரி, மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

