sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சோகத்தொரை கிராமத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர தீர்மானம்

/

சோகத்தொரை கிராமத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர தீர்மானம்

சோகத்தொரை கிராமத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர தீர்மானம்

சோகத்தொரை கிராமத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர தீர்மானம்


ADDED : அக் 04, 2024 10:10 PM

Google News

ADDED : அக் 04, 2024 10:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : 'சோகத்தொரை கிராமத்தில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்,' என, தீர்மானிக்கப்பட்டது.

குன்னுார் அருகே, சோகத்தொரை கிராம மக்கள் கடந்த, 49 ஆண்டுகளாக காந்திஜெயந்தி விழாவை கொண்டாடி வருகின்றனர். நடப்பாண்டின் விழாவில், காந்தி படத்திற்கு மலர் துாவி, ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர் தலைவர் பசுபதி தேசிய கொடி ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.

பேராசிரியர் டாக்டர் செந்தில் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, காந்தியின் அகிம்சை, தியாகம், ஒழுக்கத்தின் அவசியம் பற்றி பேசினார்.

10ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். யோகா மற்றும் விளையாட்டில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, 'கிராமத்தில், காந்தி சிலை அமைப்பது; பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது; யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் இயற்கை விவசாயத்தை மக்களிடம் சேர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவது,' போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊர் பிரமுகர் பத்மநாதன் வரவேற்றார். வேல்முருகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us