/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வருவாய் துறை அலுவலர்கள் தொடா் போராட்டம்
/
வருவாய் துறை அலுவலர்கள் தொடா் போராட்டம்
ADDED : மார் 07, 2024 11:51 AM

ஊட்டி:ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக, ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சலீம், போராட்டத்திற்கு ஆதரவாக பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், 'இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பெயர் மாற்றம் செய்யவிருந்த அரசாணையை வெளியிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பன உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

