sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 நீரோடையை தடுத்ததால் சிக்கல் தீர்வு கண்ட வருவாய் துறையினர்

/

 நீரோடையை தடுத்ததால் சிக்கல் தீர்வு கண்ட வருவாய் துறையினர்

 நீரோடையை தடுத்ததால் சிக்கல் தீர்வு கண்ட வருவாய் துறையினர்

 நீரோடையை தடுத்ததால் சிக்கல் தீர்வு கண்ட வருவாய் துறையினர்


ADDED : பிப் 20, 2026 05:01 AM

Google News

ADDED : பிப் 20, 2026 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் கோகால் அருகே தனிநபர் நீரோடையை தடுத்து, சொந்த பயனுக்கு பயன்படுத்தி வந்த நிலையில், அதனை வருவாய் துறையினர் அகற்றினர்.

கூடலுார் கோக்கால் பகுதியில் உற்பத்தியாகும் நீரோடையில் வரும், தண்ணீரை அப்பகுதியை சேர்ந்த குடும்பங்கள் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தி வந்தனர். சமீப காலமாக நீரோடையில் தண்ணீர் வரத்து நின்றுவிட்டது.

இதனால், அப்பகுதியினர் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டனர். இந்நிலையில், அங்குள்ள தனிநபர், நீரோடையை மறித்து, தண்ணீரை சொந்த பயனுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து வருவாய் துறையில் புகார் அளித்தனர்.

கூடலுார் வருவாய் ஆய்வாளர் ராம்குமார், கிராம நிர்வாக அலுவலர் மோகன் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, தடுப்புகளை அகற்றி, நீரோடை நீர் வழக்கம் போல செல்லும் வழியில் திருப்பி விட்டனர். இதனால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us