/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு, ரூ.3 லட்சம் உதவி
/
கூடலுாரில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு, ரூ.3 லட்சம் உதவி
கூடலுாரில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு, ரூ.3 லட்சம் உதவி
கூடலுாரில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு, ரூ.3 லட்சம் உதவி
ADDED : ஜன 28, 2025 10:04 PM
கூடலுார்; கூடலுார் சப்--டிவிஷனில், உடல்நலம் குறைவால் உயிரிழந்த போலீசார் குடும்பத்திற்கு, '2003 பேட்ஜ் காவலர்கள் உதவும் கரங்கள்,' அமைப்பு சார்பில், 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
நடுவட்டம் பைக்காரா போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த, தலைமை காவலர் தர்மேந்திரன், கடந்த ஜூன் 29ம் தேதி உடல் நல குறைவால் உயிரிழந்தார். இவர் குடும்பத்திற்கு, இந்த அமைப்பு சார்பில், 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி, கூடலுாரில் நடந்தது. வட்டார பொறுப்பாளர் கலில் தலைமை வகித்தார்.
டி.எஸ்.பி., வசந்தகுமார், சாகுல் ஹமீது ஆகியோர் தர்மேந்திரன் குடும்பத்தாருக்கு, 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். குடும்த்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

