sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி

/

பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி

பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி

பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி


ADDED : பிப் 02, 2024 10:34 PM

Google News

ADDED : பிப் 02, 2024 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:கூடலுாரில், சில்லறை பால் விற்பனை லிட்டருக்கு, 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நீலகிரியில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம், விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து, சில்லறை விற்பனை செய்வதுடன், ஆவின் நிறுவனத்திற்கும் வழங்கி வருகின்றனர்.

விவசாயிகளிடமிருந்து, ஒரு லிட்டர் பால், 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, வாடிக்கையாளர்களுக்கு, 44 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில், 'பால் லிட்டர் கொள்முதல் விலை, 3 ரூபாய்; சில்லறை விற்பனை விலை 4 ரூபாய்,' என, உயர்த்தப்பட்டது.

இந்த விலை உயர்வை பல கூட்டுறவு சங்கங்கள் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தி உள்ளன. கூடலுார் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், நேற்று முதல் பால் விலை உயர்வை அமல்படுத்தி உள்ளது. பால் விற்பனை விலையை திடீரென உயர்த்தியதால், உள்ளுர் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பால் விலையை குறைக்க வலியுறுத்தியுள்ளனர்.

சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'அதிகாரிகள் உத்தரவுப்படி, பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டது. இதன் மூலம் பால் உற்பத்தி விவசாயிகள் பயனடைவர். பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us