/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் நடந்த தேயிலை ஏலத்தில் விற்பனை சரிவு; ஒரே மாதத்தில் ரூ.6.45 கோடி வரை வீழ்ச்சி
/
குன்னுாரில் நடந்த தேயிலை ஏலத்தில் விற்பனை சரிவு; ஒரே மாதத்தில் ரூ.6.45 கோடி வரை வீழ்ச்சி
குன்னுாரில் நடந்த தேயிலை ஏலத்தில் விற்பனை சரிவு; ஒரே மாதத்தில் ரூ.6.45 கோடி வரை வீழ்ச்சி
குன்னுாரில் நடந்த தேயிலை ஏலத்தில் விற்பனை சரிவு; ஒரே மாதத்தில் ரூ.6.45 கோடி வரை வீழ்ச்சி
ADDED : பிப் 18, 2025 09:36 PM
குன்னுார்; குன்னுாரில் நடந்த தேயிலை ஏலங்களில், வரத்து; விற்பனை சரிந்து, 6.45 கோடி ரூபாய் மொத்த வருமானம் குறைந்தது.
குன்னுார் தேயிலை ஏல மையத்தில், கடந்த வாரம் நடந்த நடப்பாண்டின், 7வது ஏலத்தில், '12.55 லட்சம் கிலோ இலை ரகம்; 3.85 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 16.40 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது.
அதில், '9 லட்சம் கிலோ இலை ரகம்; 3.20 டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 12.20 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை கிலோவிற்கு, 121.94 ரூபாய் என இருந்தது. மொத்த வருமானம், 14.88 கோடி ரூபாய் கிடைத்தது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள், 'டீசர்வ்' மையத்தில் ஏலம் விடப்படும் நிலையில், 7வது ஏலத்திற்கு, 1.15 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. பொதுவாக, 100 சதவீதம் விற்பனையாகும் நிலையில், 1.11 லட்சம் கிலோ விற்பனையானது.
சராசரி விலை கிலோவிற்கு, 118.55 ரூபாய் என இருந்தது. கிலோவுக்கு ஒரு ரூபாய் உயர்ந்தது; 1.32 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
இரு ஏல மையங்களிலும், 16.02 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. கடந்த மாத இறுதியில் நடந்த, 4வது ஏலத்தை விட, 6.45 கோடி ரூபாய் மொத்த வருமானம் குறைந்தது. தற்போதும் தொடரும் பனி தாக்கத்தால் வரத்தும் தொடர்ந்து குறைந்து வருகிறது.