sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சத்ய சாய் பிரேம பிரவாஹினி ரத யாத்திரை; கிராமத்தில் பக்தர்கள் தரிசனம்

/

சத்ய சாய் பிரேம பிரவாஹினி ரத யாத்திரை; கிராமத்தில் பக்தர்கள் தரிசனம்

சத்ய சாய் பிரேம பிரவாஹினி ரத யாத்திரை; கிராமத்தில் பக்தர்கள் தரிசனம்

சத்ய சாய் பிரேம பிரவாஹினி ரத யாத்திரை; கிராமத்தில் பக்தர்கள் தரிசனம்


ADDED : செப் 19, 2025 08:31 PM

Google News

ADDED : செப் 19, 2025 08:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; ஸ்ரீ சத்யசாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக சத்யசாய் பிரவாஹினி எனும், தெய்வீக அன்பின் ஓட்டம், நாட்டின் பல்வேறு இடங்களிலும் ரத யாத்திரை பயணமாக நடத்தப்படுகிறது.

அதில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த, 8ல் வந்த, ரத யாத்திரை பயணம் முதுமலையில் துவங்கி, 'கார்குடி, கூடலுார், அணிக்கொரை கடநாடு, காவிலோரை, கெங்கல், சின்ன குன்னுார், பெந்தட்டி, பாரமன்னு, மோரிகல், நெல்லிமந்து, தொரை யட்டி, அறையட்டி, எப்பநாடு, கெங்க முடி, துானேரி, கொதுமுடி, பாரதியார் நகர், பெரியார் நகர், குன்னுார் நகர், ஜெகதளா, காட்டேரி, கோடேரி, அதிகரட்டி முட்டிநாடு மைனலா, தேனாடு,' உட்பட பல கிராமங்களுக்கும் சென்றன. கிராமங்களில் மக்கள் தரிசனம் செய்தனர்.

இன்று மேலுார், மஞ்சக்கம்பை, நாளை கரியமலை, மஞ்சூர், 22ல் முள்ளிகூர், இத்தலார், 23ல் நஞ்சநாடு, குருத்துகுளி, 24ல் ஊட்டியில் ரத யாத்திரை நடக்கிறது. 25ம் தேதி இந்த ரதம், கேரள மாநிலம் புறப்படுகிறது.

சாய் பக்தர்கள் கூறுகையில், 'இந்த யாத்திரை அளவில்லா அருளால் பிறந்த புனிதமான அன்பின் தெய்வீக பயணம்.

ஜாதி மத, சமய பிரிவுகள் போன்ற எல்லா வேறுபாடுகளையும் தாண்டி, ஒவ்வொரு இதயத்திலும், தெய்வீக அன்பின் ஜுவாலையை மீண்டும் எழுப்பும் ஒரே நோக்கில் அனைவரையும் ஒன்றிணைக்கும் புனித முயற்சியாகும், என்றனர்.






      Dinamalar
      Follow us