ADDED : பிப் 07, 2026 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம், தலைவர் நிஷாந்தி தலைமையில் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் முன்னிலை வகித்து அரசு திட்டங்கள் மற்றும் கூட்டத்தின் பொருள் குறித்து விளக்கினார். இதில், 'திறன் இயக்கம், எண்ணும் எழுத்தும் உள்ளடக்கிய கல்வி, அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பது, மதிப்பீடு, மகிழ் முற்றம் மற்றும் முன்னாள் மாணவர்களை இணைத்து பள்ளி ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவது,' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆசிரியர் ரவி வரவேற்றார்.

