sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

செண்டு மல்லி சாகுபடியால் மலர்ச்சி... மகிழ்ச்சி! ஆர்வம் காட்டும் விவசாயிகள்

/

செண்டு மல்லி சாகுபடியால் மலர்ச்சி... மகிழ்ச்சி! ஆர்வம் காட்டும் விவசாயிகள்

செண்டு மல்லி சாகுபடியால் மலர்ச்சி... மகிழ்ச்சி! ஆர்வம் காட்டும் விவசாயிகள்

செண்டு மல்லி சாகுபடியால் மலர்ச்சி... மகிழ்ச்சி! ஆர்வம் காட்டும் விவசாயிகள்


ADDED : ஜூன் 13, 2024 11:26 PM

Google News

ADDED : ஜூன் 13, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் செண்டு மல்லி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள வெள்ளியங்காடு, தாயனூர், தேரம்பாளையம், சம்பரவள்ளி, சிறுமுகை, காரமடை, திம்மம்பாளையம், தோலம்பாளையம் ஆகிய பகுதிகளில் செண்டு மல்லி பூ விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செண்டு மல்லி போலவே பட்டன் ரோஸ், கோழிக்கொண்டை, சம்மங்கி, ஜாதிப் பூ, மல்லிகை பூ உள்ளிட்ட மலர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தியாகும் பூக்கள் மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கோவை பூ மார்க்கெட்டிற்கு வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், விவசாயம் செய்யும் பூக்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பூ விவசாயத்தில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஊக்குவிக்கணும்!


குறிப்பாக, செண்டுமல்லி பூக்களை அதிக அளவு விவசாயம் செய்து வருகின்றனர். முகூர்த்த தினங்களில் செண்டுமல்லி ஒரு கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்பனை ஆகிறது. சாதாரண நாட்களில் செண்டுமல்லி ஒரு கிலோ ரூ. 30 இல் இருந்து ரூ.35 வரை விற்பனை ஆகின்றது.

விவசாயிகள் கூறுகையில்,''செண்டு மல்லி பூ சாகுபடிக்கு அதிக அளவில் தண்ணீர் தேவையில்லை. மூன்று மாதத்தில் பூக்கள் பூக்க துவங்கும். மேட்டுப்பாளையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும், 150 முதல் 200 கிலோ வரை செண்டு மல்லி பூ அனுப்பப்படுகிறது.

பூ விவசாயத்தை ஊக்குவிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என்றனர்.

-----






      Dinamalar
      Follow us