/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
/
சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
ADDED : பிப் 03, 2025 11:06 PM

கூடலுார்; கூடலுார் இரும்புபாலம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
கூடலுார் இரும்புபாலம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக திருவிழா நேற்று முன்தினம், துவங்கியது. காலை, 10:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, தொடர்ந்து புண்யாகவாசனம், வாஸ்துசாந்தி, மிருத்சுங்கிரணம், அங்குராற்பணம், கமலஹர்சணம், கலசஸ்தாபணம், முதற்கால யாகபூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு யந்திர ஸ்தாபனம் மருந்து சாற்றுதல் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, திரவிய ஓமம், நாடிசந்தானம், ஸ்பர்சாகுது, பூர்ணாஹுதி, யாத்ரதானம், கலச புறப்பாடுகள் நடந்தன. காலை, 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்காரம், தீபாராதணை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.