sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 பழங்குடியின கிராமங்களில் எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு

/

 பழங்குடியின கிராமங்களில் எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு

 பழங்குடியின கிராமங்களில் எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு

 பழங்குடியின கிராமங்களில் எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு


ADDED : நவ 12, 2025 11:02 PM

Google News

ADDED : நவ 12, 2025 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: பந்தலுார் பகுதி பழங்குடியின கிராமங்களில், வருவாய் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர்களாக உள்ளவர்களின், பெயர்கள், வாக்காளர் பட்டியலில் தவறாமல் இடம் பெறவும், வாக்காளர் அல்லாதவர்களின் பெயர்கள் இடம் பெறுவதை தவிர்க்கவும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் மக்கள் மத்தியில் பல்வேறு, குழப்பங்கள் நிலவி வருகிறது.

அத்துடன் கடந்த வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, வாக்காளர்களின் உறவு முறையினரின், வாக்காளர் பட்டியல் எண் மற்றும் அடையாள அட்டை எண் குறிப்பிட வேண்டும் என்ற தகவலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், இந்த விண்ணப்பங்களை பெற்ற பழங்குடியின வாக்காளர்கள், எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தெரியாமல் விண்ணப்பங்களை குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வையில், வாக்குச்சாவடி அலுவலர்கள் இணைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதில், பந்தலுார் அருகே கப்பாலா, பழங்குடியினர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகள் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், வி.ஏ.ஓ. ராஜேந்திரன், ஓட்டுச்சாவடி அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.






      Dinamalar
      Follow us