/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலையில் வளர்ச்சி பாதையில் புத்தக திருவிழா; தென்னிந்திய பதிப்பாளர் சங்க செயலாளர் பெருமிதம்
/
மலையில் வளர்ச்சி பாதையில் புத்தக திருவிழா; தென்னிந்திய பதிப்பாளர் சங்க செயலாளர் பெருமிதம்
மலையில் வளர்ச்சி பாதையில் புத்தக திருவிழா; தென்னிந்திய பதிப்பாளர் சங்க செயலாளர் பெருமிதம்
மலையில் வளர்ச்சி பாதையில் புத்தக திருவிழா; தென்னிந்திய பதிப்பாளர் சங்க செயலாளர் பெருமிதம்
ADDED : அக் 21, 2024 04:32 AM

ஊட்டி : 'மலை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி பாதையில் செல்கிறது,' என, தென்னிந்திய பதிப்பாளர் சங்க செயலாளர் தெரிவித்தார்.
ஊட்டியில், பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா, நடந்து வருகிறது.
அதில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் அரசுத் துறை சார்பில், 60க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதில், 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் இலக்கியங்கள்;வாசித்தால் வாழ்க்கை வசப்படும்,' உட்பட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடந்தது.
மாநில அளவில் பிரபலமான பேச்சாளர்கள் பங்கேற்று, புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அறிவுசார் உலகிற்கு வாருங்கள்...
புத்தக திருவிழாவின் அவசியம் குறித்து, தென்னிந்திய பதிப்பாளர் சங்க செயலாளர் முருகன் கூறியதாவது:
மலை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மூன்றாவது ஆண்டில், 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத் திருவிழாவுக்கு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட வாசகர்கள் அதிகம் வரவேண்டும்.
தொலைக்காட்சி மற்றும் அலைபேசியில் இருந்து விலகி, புத்தகங்களை அதிகம் படித்து, உலக நடப்புகளை அறிந்து கொள்ள வேண்டும். நுாலகங்களுக்கு சென்று புத்தகங்களை படிக்க வேண்டும் என்பதுதான் இந்த புத்தக திருவிழாவின் நோக்கம். புத்தகங்கள் என்றென்றும் பயனுடையவை.
ஒரு புத்தகத்தின் மூலதனம், அறிவுசார் உலகத்தை பாதுகாக்க கூடியதாக இருக்கும். 'கலை, இலக்கியம், வரலாறு, சமூகம், அறிவியல், தன்னம்பிக்கை சுய முன்னேற்றம்,' என, எண்ணற்ற தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள், ஆயிரக்கணக்கான தலைப்புகளில் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து நுால்களுக்கும், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பள்ளி மாணவர்கள், வாசகர்கள் பயன்படுத்தி, அறிவு சார் உலகத்தை மேலும் விருத்தி அடைய செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.