/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தென்மாநில தேயிலை ஏலம் ரூ.23.45 கோடி மொத்த வருவாய்
/
தென்மாநில தேயிலை ஏலம் ரூ.23.45 கோடி மொத்த வருவாய்
ADDED : ஏப் 22, 2025 11:31 PM
குன்னுார், ; தென் மாநிலங்களில், 3 ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலங்களில், 23.45 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில், கடந்த வாரம் நடந்த, 16வது ஏலத்தில், '11.69 லட்சம் கிலோ இலை ரகம்; 3.93 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 15.62 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது.
அதில், '10.66 லட்சம் கிலோ இலை ரகம்; 3.30 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 13.96 லட்சம் கிலோ விற்பனையானது.
கடந்த ஏலத்தை விட, 2.92 லட்சம் கிலோ வரத்து அதிகரித்த நிலையில், 2.34 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை கிலோவிற்கு, 122.39 ரூபாய் என இருந்தது. சராசரி விலை இறக்கம் கண்டது. மொத்த வருமானம், 17.10 கோடி ரூபாய் கிடைத்தது. ஒரே வாரத்தில், 2.80 கோடி ரூபாய் மொத்த வருமானம் உயர்ந்தது.
'டீசர்வ்' ஏல விற்பனை விபரம்
நீலகிரி மாவட்டம், கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள் டீசர்வ் மையத்தில் ஏலம் விடப்படும் நிலையில், 16வது ஏலத்திற்கு, 1.35 லட்சம் கிலோ வந்ததில் 100 சதவீதம் விற்பனையானது.
சராசரி விலை கிலோவிற்கு, 109.78 ரூபாய் என இருந்தது. வரத்தும் விற்பனையும் குறைந்தது.
1.49 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. இரு ஏல மையங்களில் சேர்த்து, 18.59 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
கடந்த வாரம் ஏலம் நடக்காத கோவை ஏல மையத்தில், இந்த ஏலத்தில், 4.80 லட்சம் கிலோ வந்ததில், 3.48 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை, 139.81 ரூபாய் என இருந்தது. 4.86 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
கொச்சி ஏல மையத்தில், 16வது ஏலம் ரத்து செய்யப்பட்டது. தென் மாநிலங்களில், 3 ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலங்களில், 23.45 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. தென் மாநில அளவில், கொச்சி ஏலம் இல்லாத நிலையில், 5.85 கோடி ரூபாய் வருவாய் சரிந்தது.