sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

விடைபெற்ற 493 ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் நிர்வாக பணிக்கு தனி அலுவலர்கள் நியமனம்

/

விடைபெற்ற 493 ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் நிர்வாக பணிக்கு தனி அலுவலர்கள் நியமனம்

விடைபெற்ற 493 ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் நிர்வாக பணிக்கு தனி அலுவலர்கள் நியமனம்

விடைபெற்ற 493 ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் நிர்வாக பணிக்கு தனி அலுவலர்கள் நியமனம்


ADDED : ஜன 07, 2025 11:47 PM

Google News

ADDED : ஜன 07, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில், 493 ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்ததை அடுத்து, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், '6 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 59 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 35 கிராம ஊராட்சி தலைவர்கள், 393 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,' என, மொத்தம், 493 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த, 2019ம் ஆண்டு ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் நடந்தது. தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும், 2020ம் ஜன, 6ம் தேதி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் பதவி ஏற்று கொண்டனர்.

இவர்களின் ஐந்து ஆண்டு பதவிக்காலம், 2025ம் ஆண்டு கடந்த, 5ம் தேதியுடன் முடிந்தது. இதேபோல், மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், துணைத் தலைவர்கள் பொறுப்பும் முடிவடைந்தது.

சிறப்பு அலுவலர்கள் நியமனம்


இதையடுத்து , சிறப்பு தனி அலுவலர்களை நியமிக்க அரசு முடிவு செய்து உத்தரவிட்டது. அதன்படி , நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி அமைப்பிற்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊட்டி, குன்னுார், கோத்தகிரி மற்றும் கூடலுார் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், 4 ஒன்றியங்களில் உள்ள, 35 கிராம ஊராட்சிகளுக்கு அந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ( கிராம ஊராட்சிகள்) சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு வாகனம் ஒப்படைப்பு


ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் கூறியதாவது, 'ஊரக உள்ளாட்சி அமைப்புகளான மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளில் பதவி காலம், 2025ம் ஆண்டு ஜன., 5ம் தேதியுடன் முடிந்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன.

அவர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில், மாவட்ட ஊராட்சி தலைவர் தனது வாகனத்தை ஊட்டி கலெக்டர் அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் வாகனத்தை ஒப்படைத்தனர்,' என்றனர்.






      Dinamalar
      Follow us