sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை; வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை

/

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை; வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை; வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை; வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை


ADDED : ஜூலை 16, 2025 08:34 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 08:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; 'சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்றால் நடவடிக்கை பாயும்,' என, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி மலை பகுதியாக உள்ளதால், இங்கு காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதில், அதிகமாக வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அறுவடை பணி முடிந்த பின், சரக்கு வாகனங்களின் மேல் அமர்ந்து செல்வது வாடிக்கையாகி விட்டது.

குறுகலான சாலையில் செல்லும் வாகனங்களில் தொழிலாளர்கள் அமர்ந்து செல்வதால் விபத்து அபாயம் மற்றும் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக, ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

அதில், வட்டார போக்குவரத்து அலுவலர் சக்தி குமார் பேசியதாவது:

தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டப்படி அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது தொழிலாளர்களை அமர வைத்து இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

மேலும், சரக்கு வாகனங்களுக்கு வரி செலுத்தாமல் வாகனங்களை இயக்கினால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு வாகனம் ஓட்ட பெற்றோர் ஊக்குவித்தாலும் அல்லது பெற்றோருக்கு தெரியாமல் வாகனங்களை இயக்கினாலும் சட்டப்படி குற்றமாகும். பிற மாநிலங்களின் பதிவெண்கொண்ட வாகனங்களை இங்கு இயக்கினால், மறுப்பதிவு செய்து இயக்க வேண்டும், அதை மீறி இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us