UPDATED : ஆக 23, 2026 07:00 PM
ADDED : ஆக 23, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
பந்தலூர்:பந்தலூர் பஜாரின் மேல் பகுதியில், அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனை ஒட்டி முருகன் கோவில், நீதிமன்றம், அரசு மருத்துவமனை உள்ளது. இந்த பகுதிக்கு மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த பகுதிக்கு படையெடுக்கும் குரங்குகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து, கூரைகளை சேதப்படுத்தி வருவதுடன், பாதுகாப்பு சுவர்களில் ஏறி மாணவர்களை அச்சுறுத்தி வருகிறது.
இதனால், மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மாணவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூண்டுகள் வைத்து பிடித்துச் செல்ல வேண்டும். என, பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
