sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

'செய்முறை பயிற்சியால் படித்தது மறக்காது': மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

/

'செய்முறை பயிற்சியால் படித்தது மறக்காது': மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

'செய்முறை பயிற்சியால் படித்தது மறக்காது': மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

'செய்முறை பயிற்சியால் படித்தது மறக்காது': மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை


ADDED : ஜன 03, 2024 11:41 PM

Google News

ADDED : ஜன 03, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர் : 'பல முறை படிப்பதை விட, ஒரு முறை செய்முறை பயிற்சி செய்து பார்த்தால், படித்தது மறக்காது,' என, கலெக்டர் கிராந்தி குமார் பேசினார்.

அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஜி.டி., நாயுடு அறக்கட்டளை சார்பில், ரூ. 20 லட்சம் மதிப்பில், ஜி.டி., ஸ்டெம் எனும், அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் கணித ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆய்வகத்தை கலெக்டர் கிராந்தி குமார் திறந்து வைத்து பேசியதாவது:

தொழில் துறையில் வளர்ச்சி பெற்ற நகரமாக, கோவை உருவாக காரணம் ஜி.டி., நாயுடு போன்ற ஆராய்ச்சியாளர்கள் தான்.

ஸ்டெம்' ஆய்வகத்தின் மூலம் உங்களுக்கு பல பயன்கள் கிடைக்கும். அதை பயன்படுத்தி திறமையை வளர்த்து கொள்ளுங்கள். பலமுறை படிப்பதை விட, ஒரு முறை செய்முறை பயிற்சி செய்து பார்த்தால், படித்தது எதுவும் மறக்காது. பலதரப்பட்ட வசதிகள் கொண்ட பழமையான பள்ளியில் படிக்கும் நீங்கள், வரவுள்ள பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

ஜி.டி., நாயுடு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபால் தலைமை வகித்தார்.

அறங்காவலர் சந்திரா, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் கண்ணன் வரவேற்றார்.

பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் கேசவ குமார், உதவி திட்ட அலுவலர் சிவக்குமார், பி.டி.ஏ., தலைவர் கோவிந்தராஜ் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us