/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஜார் பகுதியில் திடீர் கடைகள் போக்குவரத்துக்கு இடையூறு
/
பஜார் பகுதியில் திடீர் கடைகள் போக்குவரத்துக்கு இடையூறு
பஜார் பகுதியில் திடீர் கடைகள் போக்குவரத்துக்கு இடையூறு
பஜார் பகுதியில் திடீர் கடைகள் போக்குவரத்துக்கு இடையூறு
ADDED : ஏப் 22, 2025 11:31 PM

கோத்தகிரி, ; கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில், கடைகள் வைக்கப்பட்டுளதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் உள்ளிட்ட, சமவெளி பகுதிகளில் இருந்து, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், கோத்தகிரி வழியாக சென்று வர விரும்புகின்றனர். இதற்கு காரணம், கொண்டை ஊசி வளைவுகள் குறைவு. பயண நேரம் எரிப்பொருள் செலவும் குறைவு.
கோடை விழா நாட்களில், இச்சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில், கட்டபெட்டு 'இன்கோ' சந்திப்பில் தனியார் சிலர், சாலையை ஒட்டி கடைகள் வைத்துள்ளனர்.
இதனால், தனியார் வாகனங்கள், நிறுத்த முடியாததால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இனிவரும் நாட்களில் கோடை விழா துவங்குவதால், வாகனங்களின் எண்ணிக்கை இச்சாலையில் அதிகரித்து, நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இங்கு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.