/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்தில் 15 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு; துணை இயக்குநர் சுஜித் தகவல்
/
பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்தில் 15 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு; துணை இயக்குநர் சுஜித் தகவல்
பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்தில் 15 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு; துணை இயக்குநர் சுஜித் தகவல்
பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்தில் 15 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு; துணை இயக்குநர் சுஜித் தகவல்
ADDED : பிப் 19, 2025 10:03 PM

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்தில் நடத்திய வருடாந்திர வனவிலங்கு கணக்கெடுப்பில், 15 புதிய உயிரினங்கள் இருப்பது தெரியவந்தது.
பரம்பிக்குளம் புலிகள் சரணாலய துணை இயக்குநர் சுஜித் கூறியதாவது:
பரம்பிக்குளம் புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை, மாநில அரசு, திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டு செயல்படும், 'டிராவன்கூர்' இயற்கை வரலாற்று சங்கம் ஆகியவை இணைந்து, ஆண்டுதோறும் வனவிலங்கு கணக்கெடுப்பை நடத்துகிறது.
நடப்பாண்டு கணக்கெடுப்பு, கடந்த, 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்தது. இதில், 15 புதிய உயிரினங்கள் இருப்பது தெரியவந்தது.
பெயின்ட் ஸ்பர்போல் (வர்ண சுண்டங்கோழி), ரூபஸ் பெல்லிட் ஹோக் ஈகிள் (கருஞ்சிவப்பு வயிற்றுக் கழுகு), இந்தியன் கிரே ஹார்ன்பில் (நாட்டு சாம்பல் இருவாச்சி), வைட் பெல்லிட் ஷோலக்கிளி (ஆனைமலை சோலைக்கிளி), டைகா பிளை கேட்ச்சர் (செந்தொண்டை ஈப்பிடிப்பான்), பிளைன் பிரினியா (வயல் குருவி), கிரீன் லீப்வார்ப்ளர் (கடும் பச்சை நிற சிட்டு குருவி) ஆகிய புதிய பறவைகள் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், லோங் பிரான்டட் புஷ்பிரவுன் (தமிழ் தவிடன்), ஷோட்டு சில்வ்லைன், ஸ்கார்ஸ் ஷோட்டு சில்லைன், வைட் டிஸ்க் ஹெட்ஜ்ப்ளு, பழநி டார்ட்டு ஆகிய புதிய பட்டாம்பூச்சிகளும் காணப்பட்டுள்ளன.
பிரவுன் டார்னர், பாரக்கீட் டார்னர், வெஸ்ட்டாலிஸ் சப்மொன்டானா ஆகிய புதிய தும்பிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வறட்சி காலத்தில், 15 புதிய இனங்கள் காணப்பட்டுள்ளது பரம்பிக்குளத்தின் பல்லுயிரியல் பெருக்கத்தை குறிக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.