ADDED : மார் 20, 2024 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் உட்கோட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் 56 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன.
கோவை மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பில்லூர் டேம், அன்னூர் உள்ளிட்ட 5 போலீஸ் ஸ்டேஷன்களில், தனி நபர்கள் உரிமம் பெற்று வைத்திருந்த 63 துப்பாக்கிகளில், 56 துப்பாக்கிகள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டன.
மீதம் உள்ள 7 துப்பாக்கிகள் வங்கி உள்ளிட்ட அத்தியவசிய தேவை பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
---

