sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நிலவாழ் பறவைகள் முதுமலையில் கணக்கெடுப்பு

/

நிலவாழ் பறவைகள் முதுமலையில் கணக்கெடுப்பு

நிலவாழ் பறவைகள் முதுமலையில் கணக்கெடுப்பு

நிலவாழ் பறவைகள் முதுமலையில் கணக்கெடுப்பு


ADDED : மார் 03, 2024 10:17 PM

Google News

ADDED : மார் 03, 2024 10:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:முதுமலை, கூடலுார் வனப்பகுதியில், 82 இடங்களில் ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் உள்வட்டம்; மசினகுடி கோட்டம்; கூடலுார் வனக்கோட்டத்தில், ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள், நேற்று முன்தினம், மாலை துவங்கி இரண்டு நாட்கள் நடந்தது.

இதற்காக, 'முதுமலை உள்வட்டம் பகுதியில், 34 பிரிவுகள், மசினகுடி கோட்டத்தில், 23 பிரிவுகள், கூடலுார் வன கோட்டத்தில், 25 பிரிவுகள்,' என, மொத்தம், 82 இடங்களில் தேர்வு செய்து, பறவைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர். இப்பணியில் இரண்டு முதல் மூன்று வன ஊழியர்கள், தன்னார்வலர்கள், கூடலுார் அரசு கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். இரண்டாவது நாளான நேற்று, காலை, 6:30 மணிக்கு துவங்கிய வனவிலங்கு கணக்கெடுப்பணிகள் காலை, 10:30 மணிக்கு நிறைவு பெற்றது.

கணக்கெடுப்பு பணியின் போது பறவை இனங்கள் குறித்த விபரம், அவைகளின் வாழ்விடம், வன சூழல் குறித்து விவரங்களை பதிவு செய்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'கணக்கெடுப்பு பணியின் போது பதிவு செய்யப்பட்ட பறவை இனங்கள் குறித்த விபரங்கள் கணக்கிடப்பட்டு அதன் விபரம் வெளியிடப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us