பணி நேரத்தை குறைக்க வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நேரத்தை குறைக்க வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 24, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
ஊட்டி : நீலகிரியில் இரவு பணி நேரத்தை குறைக்க வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, டாஸ்மாக் சி.ஐ.டி.யு. , மாவட்ட தலைவர் ஆல்துரை தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் விஜயராஜ், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் மகேஷ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், ‘முக்கிய கோரிக்கையாக நண்பகல், 12:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, பணி நேரத்தை குறைக்க வேண்டும்,’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து , கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். டாஸ்மாக் சி.ஐ.டி.யு., மாநில குழு உறுப்பினர் நவீன் சந்திரன் உட்பட ஏராளமான டாஸ்மாக் ஊழியர்கள் பங்கேற்றனர்.
