ADDED : ஜூலை 19, 2011 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : பெரிய வண்டி சோலையில் இயங்கும் மதுக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது; பெரிய வண்டி சோலையில் இயங்கி வரும் மதுக்கடையை அகற்ற கோரி பல முறை வலியுறுத்தி உள்ளோம்.
ரேஷன் கடை, மளிகை கடை மற்றும் மதுக்கடை ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன. எப்போது குடிமகன்கள் அப்பகுதியில் நடமாடுவதால் மக்கள் ரேஷன் கடை மற்றும் மளிகை கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்க முடியவதில்லை. எனவே, மதுக்கடையை அப்பகுதியிலிருந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

