sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊட்டியில் 4வது புத்தக திருவிழா துவங்கியது

/

ஊட்டியில் 4வது புத்தக திருவிழா துவங்கியது

ஊட்டியில் 4வது புத்தக திருவிழா துவங்கியது

ஊட்டியில் 4வது புத்தக திருவிழா துவங்கியது


ADDED : அக் 24, 2025 11:35 PM

Google News

ADDED : அக் 24, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: -ஊட்டியில் நான்காவது புத்தக திருவிழா நேற்று துவங்கியது.

நீலகிரி மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் பப்பாசி ஆகியவை இணைந்து, ஆண்டு தோறும், புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. நடப்பாண்டு, 4வது புத்தகத் திருவிழா, பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடந்தது.

அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், புத்தக திருவிழாவை துவக்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார். இதில், கலெக்டர் லட்சுமி பவ்யா, ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ், எஸ்.பி., நிஷா, மாவட்ட வன அலுவலர் கவுதம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

புத்தக திருவிழா, அடுத்த மாதம் 2ம் தேதிவரை, 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில், 25 க்கும் மேற்பட்ட அரங்குகளில், பல்லாயிர கணக்கான புத்தகங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

தினமும், காலை, 10:00 மணி முதல், இரவு, 7:00 மணிவரை நடைபெறுகிறது. இதில், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், புத்தக அரங்கங்கள், சிந்தனை அரங்கம், உணவரங்கம், அரசுத் துறைகளில் கண்காட்சி அரங்கங்கள் இடம் பெற்றுள்ளன.

விழாவின் முதல் நிகழ்ச்சியாக, 'எண்ணித் துணிக கருமம்' என்ற தலைப்பில், மதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணனின் சிறப்புரை நடந்தது. இதில், ஏராளமான மாணவர்கள் உட்பட, பொதுமக்கள் பங்கேற்று புத்தகங்களை வாங்கி சென்றனர்.






      Dinamalar
      Follow us