ADDED : ஏப் 14, 2025 09:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் ஜான்ஸ் ஆலயத்தில் வேதாகம திருவிழா நடந்தது.
இதில், முழு வேதாகமத்தை கையினால் எழுதப்பட்டது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த, 800 பேர் எழுதி புதிய சாதனை படைத்துள்ளனர். நேற்று காலை 10:00 மணியில் இருந்து மாலை 3:00 மணி வரை, 5 மணி நேரத்தில் வேதாகம பிரிவுகள் வாரியாக பிரித்து கொடுத்து எழுத வைத்தனர்.
வேதாகம ஊழியத்தின் தலைவர் வீராசாமி தாஸ், ஜான்ஸ் சர்ச் ரெவரண்ட் கிறிஸ்டோபர் சாம்ராஜ், தலைமை வகித்து துவக்கி வைத்தனர். ஏற்பாடுகளை, சபை செயலாளர் எட்வர்டு, பொருளாளர் ஞானதாஸ். கமிட்டி அங்கத்தினர்கள் செய்திருந்தனர்.