sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊட்டியில் உறைப்பனி காலம் துவக்கம்; கடும் குளிரான காலநிலை

/

ஊட்டியில் உறைப்பனி காலம் துவக்கம்; கடும் குளிரான காலநிலை

ஊட்டியில் உறைப்பனி காலம் துவக்கம்; கடும் குளிரான காலநிலை

ஊட்டியில் உறைப்பனி காலம் துவக்கம்; கடும் குளிரான காலநிலை


ADDED : நவ 25, 2024 06:32 AM

Google News

ADDED : நவ 25, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; ஊட்டியில் உறைப்பனி தென்பட்டதால், கடும் குளிரான காலநிலை நிவுகிறது.

நீலகிரியில் ஆண்டுதோறும் அக்., மாதம் இறுதி வரை நீர் பனி தென்படுகிறது. நவ.,மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் உறைப்பனி விழதுவங்கும். நடப்பாண்டு, கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. சில நாட்களாக வெயிலான காலநிலை நிலவியது.

இந்நிலையில், நேற்று காலை, நகரின் பல்வேறு பகுதிகளில் உறைப்பனி தென்பட்டது. குறிப்பாக, காந்தள், தலைக்குந்தா, எச்.பி.எப்., சூட்டிங் மட்டம் உள்ளிட்ட பகுதி புல்வெளிகளில் உறைப்பனி தென்பட்டது. பகல் நேரத்தில் வெயிலான காலநிலை நிலவியது.

இதனால், ஊட்டியில் நேற்று, அதிகபட்சம் 19 டிகிரி; குறைந்தபட்சம், 5 டிகிரி 'சி' வெப்பநிலை பதிவாகி இருந்தது. பனியின் தாக்கத்தால் காலை நேரங்களில் கடும் குளிர் நிலவியது. தேயிலை தோட்டம் மலை காய்கறி தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

மறுபுறம், தேயிலை செடிகள், மலை காய்கறிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட துவங்கியுள்ளனர். அரசு தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் பாதிக்காமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை பூங்கா நிர்வாகம் எடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us