sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மண் சரிந்து இறந்த இளைஞர் உடல் ஜார்க்கண்ட் சென்றது

/

மண் சரிந்து இறந்த இளைஞர் உடல் ஜார்க்கண்ட் சென்றது

மண் சரிந்து இறந்த இளைஞர் உடல் ஜார்க்கண்ட் சென்றது

மண் சரிந்து இறந்த இளைஞர் உடல் ஜார்க்கண்ட் சென்றது


ADDED : மார் 14, 2024 11:37 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:ஊட்டியில் மண்சரிவு ஏற்பட்டு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த ஜார்க்கண்ட் மாநில வாலிபரின் உடலை, அரசு சார்பில் ஊருக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஊட்டி பாபுஷா லைன் பகுதியில் கட்டுமான பணியின் போது, எதிர்பாராத விதமாக மண் சரிந்து,இடிபாடுகளில் சிக்கிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான்,20, உயிரிழந்தார். அவருக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, 2 லட்சம் ரூபாய் வழங்கவும், சிகிச்சை பெற்று வரும் ஜாகீர்,22, என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

மேலும், இறந்தவரின் உடலை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு கொண்டு செல்ல, அரசு சார்பில் ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் வாலிபரை நேரில் சந்தித்த கலெக்டர் அருணா கூறுகையில், ''விபத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரின் உடலை அரசு சார்பில், சொந்த ஊருக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞருக்கு, முதல்வரின் உத்தரவுப்படி, 50 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது,'' என்றார்.

இதில், மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, தாசில்தார் சரவணகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us