sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் முனைவோரின் பங்களிப்பு அவசியம்

/

பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் முனைவோரின் பங்களிப்பு அவசியம்

பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் முனைவோரின் பங்களிப்பு அவசியம்

பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் முனைவோரின் பங்களிப்பு அவசியம்


ADDED : செப் 29, 2025 10:00 PM

Google News

ADDED : செப் 29, 2025 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், நிமிர்ந்து நில் திட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் உயர் மட்ட மேலாண்மை நிகழ்ச்சி நடந்தது.

திட்ட நோக்கத்துக்கான விளக்க பதாகையை, கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டு பேசுகையில், ''மாநிலத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோரின் பங்களிப்பு மிகவும் அவசியம்.இளைஞர்களிடையே புத்தாக்கம், தொழில் முனைவிற்கான சிந்தனைகளை ஊக்குவிக்க, 'நிமிர்ந்து நில்' என்ற தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் பிரச்னைகளை கண்டு பயப்படக்கூடாது. மாறாக அந்த பிரச்னையில் இருந்து ஒரு புதிய வணிகத்திற்கான யோசனையை கண்டுபிடிக்க வேண்டும்,'' என்றார். மேலும், நிமிர்ந்து நில் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் கல்லுாரிகளின் பங்களிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாநில திட்ட மேலாளர் சண்முகராஜ், 'இளைஞர் கண்டுபிடிப்பு, தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வைகள், சமூக பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் முனைவோரின் பங்களிப்பின் அவசியம்,' ஆகியவை குறித்து விளக்கினார்.முதன்மை பயிற்றுனர் கவுதம், நீலகிரி மாவட்ட திட்ட மேலாளர் கோபால்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us