sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நிவாரணம் தர கோரிக்கை பழங்குடியினர் போராட்டம்

/

நிவாரணம் தர கோரிக்கை பழங்குடியினர் போராட்டம்

நிவாரணம் தர கோரிக்கை பழங்குடியினர் போராட்டம்

நிவாரணம் தர கோரிக்கை பழங்குடியினர் போராட்டம்


ADDED : பிப் 22, 2024 02:38 AM

Google News

ADDED : பிப் 22, 2024 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம்; முதுமலை ஊராட்சி பகுதியில் வசித்து வரும், பழங்குடியினர் மற்றும் மவுட்டாடன் செட்டி மக்களை, மாற்றிடம் திட்ட மூலம், வனத்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.

இத்திட்டத்தில் பழங்குடியினருக்கு, மாநில அரசு உரிய நிவாரணம் வழங்க கோரி, பழங்குடி மக்கள் சங்கம் சார்பில், முதுமலை நுழைவு வாயில் பகுதியான, போஸ்பாராவில் நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடந்தது.

அதில், 'அரசின் மாற்றிட திட்டத்தின் கீழ் வெளியேற்றப்பட்ட பழங்குடிகள், மவுண்டாடன் செட்டி மக்களுக்கு நிவாரண தொகையாக, 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். பழங்குடியினருக்கு வழங்கிய நிவாரண தொகையில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'வன உரிமை அங்கீகாரம் சட்டம், 2006ன் கீழ், அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும்' என, பழங்குடியினர் வலியுறுத்தினர்.

தொடர்ந்து, பழங்குடியின மக்களிடம், அதிகாரிகள் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின் போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்தனர்.






      Dinamalar
      Follow us