/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளத்தில் விழுந்து தவித்த பசு; தீயணைப்பு துறையினர் மீட்பு
/
பள்ளத்தில் விழுந்து தவித்த பசு; தீயணைப்பு துறையினர் மீட்பு
பள்ளத்தில் விழுந்து தவித்த பசு; தீயணைப்பு துறையினர் மீட்பு
பள்ளத்தில் விழுந்து தவித்த பசு; தீயணைப்பு துறையினர் மீட்பு
ADDED : மார் 10, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:குன்னுார் கிளண்டேல் பகுதியில், 20 அடி பள்ளத்தில் விழுந்து ஒரு நாள் முழுவதும் வெளியேற முடியாமல் தவித்த பசுவை, தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
குன்னுார் கிளண்டேல் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ். இவரது பசு மாடு, 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளது.
பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று வீட்டின் அருகே, 20 அடி பள்ளத்தில் விழுந்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக, கிடைத்த தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள், அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடி பசுவை உயிருடன் மீட்டனர்.

