sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கரடி துரத்தியதால் காவல் நிலையத்தில் தாயுடன் தஞ்சம் அடைந்த சிறுமி

/

கரடி துரத்தியதால் காவல் நிலையத்தில் தாயுடன் தஞ்சம் அடைந்த சிறுமி

கரடி துரத்தியதால் காவல் நிலையத்தில் தாயுடன் தஞ்சம் அடைந்த சிறுமி

கரடி துரத்தியதால் காவல் நிலையத்தில் தாயுடன் தஞ்சம் அடைந்த சிறுமி


ADDED : நவ 14, 2024 05:24 AM

Google News

ADDED : நவ 14, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரியில் கரடி துரத்தியதால், காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து, தாயும் மகளும் உயிர் தப்பினர்.

கோத்தகிரி காவல் நிலைய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில், அரசு மருத்துவமனையும், குடியிருப்புகளும் உள்ளன. இதனால், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு இரவில், தாய் தனது ஒன்பது வயது மகளும் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளனர் அப்போது, ஒரு கரடி துரத்தி தாக்க வந்துள்ளது.

அச்சமடைந்த இருவரும், அலறியடித்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்குள் சென்று தப்பியுள்ளனர். இவர்களது அலறல் சப்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் மற்றும் போலீசார் ஓடிவந்து கரடியை துரத்தி உள்ளனர். மக்கள் கூறுகையில், 'அசம்பாவிதம் நடப்பதற்கு முன், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடமாடும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us