/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கரடி துரத்தியதால் காவல் நிலையத்தில் தாயுடன் தஞ்சம் அடைந்த சிறுமி
/
கரடி துரத்தியதால் காவல் நிலையத்தில் தாயுடன் தஞ்சம் அடைந்த சிறுமி
கரடி துரத்தியதால் காவல் நிலையத்தில் தாயுடன் தஞ்சம் அடைந்த சிறுமி
கரடி துரத்தியதால் காவல் நிலையத்தில் தாயுடன் தஞ்சம் அடைந்த சிறுமி
ADDED : நவ 14, 2024 05:24 AM
கோத்தகிரி: கோத்தகிரியில் கரடி துரத்தியதால், காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து, தாயும் மகளும் உயிர் தப்பினர்.
கோத்தகிரி காவல் நிலைய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில், அரசு மருத்துவமனையும், குடியிருப்புகளும் உள்ளன. இதனால், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு இரவில், தாய் தனது ஒன்பது வயது மகளும் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளனர் அப்போது, ஒரு கரடி துரத்தி தாக்க வந்துள்ளது.
அச்சமடைந்த இருவரும், அலறியடித்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்குள் சென்று தப்பியுள்ளனர். இவர்களது அலறல் சப்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் மற்றும் போலீசார் ஓடிவந்து கரடியை துரத்தி உள்ளனர். மக்கள் கூறுகையில், 'அசம்பாவிதம் நடப்பதற்கு முன், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடமாடும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.