/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கணவனை தாக்கிய கரடி சத்தமிட்டு விரட்டிய மனைவி காயமடைந்தவருக்கு கோவையில் தீவிர சிகிச்சை
/
கணவனை தாக்கிய கரடி சத்தமிட்டு விரட்டிய மனைவி காயமடைந்தவருக்கு கோவையில் தீவிர சிகிச்சை
கணவனை தாக்கிய கரடி சத்தமிட்டு விரட்டிய மனைவி காயமடைந்தவருக்கு கோவையில் தீவிர சிகிச்சை
கணவனை தாக்கிய கரடி சத்தமிட்டு விரட்டிய மனைவி காயமடைந்தவருக்கு கோவையில் தீவிர சிகிச்சை
ADDED : ஆக 28, 2025 02:20 AM

கூடலுார்:கூடலுார் தேவாலா ஹட்டி அருகே கணவனை தாக்கிய கரடியை, மனைவி சத்தமிட் டு விரட்டியதால் காயத்துடன் உயிர் தப்பினார்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவாலா ஹட்டி புதியகுன்னு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 55. இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை, பல வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது, கரடி ஒன்று வீட்டின் அருகே கன்று குட்டியை விரட்டியது. அதனை காப்பாற்ற, பாலகிருஷ்ணன் சத்தமிட்டுள்ளார்.
திடீரென, கரடி இவரை துரத்தி வந்து தலையில் தாக்கி உள்ளது. இவரின் அலறல் சத்தம் கேட்ட மனைவி சசிகலா, சத்தமிட்டு கரடியை விரட்டி உள்ளார். பாலகிருஷ்ணன் தலை உள்ளிட்ட பல இடங்களில் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனக்காப்பாளர் கலைக்கோவில் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அவரை மீட்டு, வனத்துறை வாகனத்தில் கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சசிகலா கூறுகையில், ''என் வீட்டின் அருகே திடீரென கணவர் அலறும் சத்தம் கேட்டு ஓட்டி வந்த போது, கரடி அவரின் தலையை பிடித்து தாக் கியது. எனது சத்தம் கேட்டவுடன் ஓடியது. அவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்,'' என்றார்.

