sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ரேசன் கடையை உடைத்து அரிசி ருசித்த கொம்பன்

/

ரேசன் கடையை உடைத்து அரிசி ருசித்த கொம்பன்

ரேசன் கடையை உடைத்து அரிசி ருசித்த கொம்பன்

ரேசன் கடையை உடைத்து அரிசி ருசித்த கொம்பன்


ADDED : ஆக 23, 2025 03:01 AM

Google News

ADDED : ஆக 23, 2025 03:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: பந்தலுார் அருகே மேங்கோரேஞ்ச் ரேசன் கடையை, 3-வது முறையாக உடைத்து அரிசியை ருசித்த கொம்பன் யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று தனியாக உலா வருவதுடன், ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்கள், குடியிருப்புகளை உடைத்து அரிசி உட்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளது.

இந்த யானை கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர், மேங்கோரேஞ்ச் என்ற இடத்தில் தேயிலை தொழிற் சாலை மற்றும் எஸ்டேட் அலுவலர்கள், தொழிலாளர் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ரேஷன் கடையின் கதவுகளை உடைத்து ரேஷன் அரிசி மற்றும் சர்க்கரையை ருசித்து சென்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, ரேஷன் கடைக்கு வந்த யானை கதவை உடைத்து அரிசி மூட்டையை வெளியே எடுத்து சாலையில் போட்டு சேதப்படுத்தி ருசித்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவால வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனக் குழுவினர், அப்பகுதிக்கு வந்து, யானையை துரத்தி உள்ளனர்.

அதனை கண்டுகொள்ளாத யானை, வெளியே எடுத்த அரிசி முழுவதையும் உட்கொண்ட பின்னரே, அங்கிருந்து சென்றது.

இப்பகுதியை வனக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us