ADDED : செப் 02, 2023 05:24 PM

அ நிறம் | அளவு
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்கள் கனமழை பெய்தது.
நேற்று மழை சற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும், நண்பகல், 12:00 மணிக்கு துவங்கிய மழை, மாலை வரை விட்டு விட்டு கொட்டி தீர்த்தது. மழைக்கு பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. பயிர் சேதமான பகுதிகளை தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, மலை காய்கறி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
