sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கூடுதலாக ரூ.250 கொண்டு சென்றவருக்கு வந்த பிரச்னை

/

கூடுதலாக ரூ.250 கொண்டு சென்றவருக்கு வந்த பிரச்னை

கூடுதலாக ரூ.250 கொண்டு சென்றவருக்கு வந்த பிரச்னை

கூடுதலாக ரூ.250 கொண்டு சென்றவருக்கு வந்த பிரச்னை


ADDED : மார் 20, 2024 01:18 AM

Google News

ADDED : மார் 20, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி':கோத்தகிரியில், 50 ஆயிரத்து 250 ரூபாய் கொண்டு சென்றவரின் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. மாவட்ட முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர், கண்காணித்து வருகின்றனர். அதன்படி, அதிக பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்வதை, வாகனம் முழுவதும் பறக்கும் படையினரால் சோதனையிடப்படுகிறது.

வாகனங்களில், 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக பணம் கொண்டு செல்ல அனுமதி உண்டு. இந்நிலையில், நேற்று கோத்தகிரியில் இருந்து, ஊட்டிக்கு இருசக்கர வாகனத்தில் தமிழ்செல்வன் என்பவர் சென்றுள்ளார்.

கட்டபெட்டு பகுதியில், குன்னுார்- ஊட்டி சந்திப்பில் பறக்கும் படையினர் அந்த இருச்சக்கர வாகனத்தை சோதனையிட்டபோது, தமிழ்ச்செல்வன் என்பவரிடம், 50 ஆயிரத்து 250 ரூபாய் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால், அவர் விரக்தி அடைந்தார்.






      Dinamalar
      Follow us