sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தாயகம் திரும்பிய மக்கள்: பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டும்

/

தாயகம் திரும்பிய மக்கள்: பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டும்

தாயகம் திரும்பிய மக்கள்: பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டும்

தாயகம் திரும்பிய மக்கள்: பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டும்


ADDED : மார் 03, 2024 11:02 PM

Google News

ADDED : மார் 03, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;'மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் தாயகம் திரும்பிய மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண அரசு வாரியம் அமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

தாயகம் திரும்பியோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கந்தையா கூடலுாரில் நிருபர்களிடம் கூறுகையில்,''இந்தியா -இலங்கை உடன்படிக்கையின் படி, இந்திய குடியுரிமை கேட்பவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆக்கிரமிப்பில், உள்ள தாயகம் திரும்பியோர் இடங்களை மீட்க வேண்டும்.

அரசு தேயிலை தோட்டங்களில் உள்ள தாயகம் திரும்பிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்; பல ஆண்டுகளாக விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்; கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; தாயகம் திரும்பிய மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண வாரியம் அமைக்க வேண்டும்,'' என்றார்.

அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், நிர்வாகிகள் சிவகுமார், முருகன், தட்சணாமூர்த்தி, மாரிமுத்து, செல்வராஜ், சந்தானம் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us