sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வெறும் காற்று மட்டுமே வரும் திட்டத்திற்கு 4.5 லட்ச ரூபாய் செலவு

/

வெறும் காற்று மட்டுமே வரும் திட்டத்திற்கு 4.5 லட்ச ரூபாய் செலவு

வெறும் காற்று மட்டுமே வரும் திட்டத்திற்கு 4.5 லட்ச ரூபாய் செலவு

வெறும் காற்று மட்டுமே வரும் திட்டத்திற்கு 4.5 லட்ச ரூபாய் செலவு


ADDED : அக் 23, 2025 10:42 PM

Google News

ADDED : அக் 23, 2025 10:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர் அக்.24-: பந்தலூர் அருகே அயனிபிறா பகுதியில், 4.5 லட்ச ரூபாய் செலவு செய்தும், குடி தண்ணீர் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அமைந்துள்ளது அயனிபிறா கிராமம். இங்கு பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் குடியிருந்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த, 2022--23ம் நிதியாண்டில் 4.55 லட்ச ரூபாய் செலவில், ஊராட்சி மூலம் குடிநீர் திட்டம் செயல்டுத்தப்பட்டது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய்கள் இணைப்பு தரப்பட்டது. ஆனால் இதுவரை எந்த குழாயிலும் தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த சண்முகம் கூறுகையில், அனைவருக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை, ஊராட்சி நிர்வாகங்கள் பெயரளவிற்கு செயல்படுத்தி உள்ளது. இதனால் அரசின் நிதி விரயமாக்கப்பட்டுள்ளதே தவிர மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

எனவே இந்த திட்டம் குறித்து மத்திய அரசு தனிக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us