sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தோட்டத்தில் காய்ந்து விழுந்த ஈட்டி மரங்களை கடத்தும் அபாயம்! வனத்துறை ஆய்வு செய்து பாதுகாப்பது அவசியம்

/

தோட்டத்தில் காய்ந்து விழுந்த ஈட்டி மரங்களை கடத்தும் அபாயம்! வனத்துறை ஆய்வு செய்து பாதுகாப்பது அவசியம்

தோட்டத்தில் காய்ந்து விழுந்த ஈட்டி மரங்களை கடத்தும் அபாயம்! வனத்துறை ஆய்வு செய்து பாதுகாப்பது அவசியம்

தோட்டத்தில் காய்ந்து விழுந்த ஈட்டி மரங்களை கடத்தும் அபாயம்! வனத்துறை ஆய்வு செய்து பாதுகாப்பது அவசியம்


ADDED : ஆக 29, 2024 09:56 PM

Google News

ADDED : ஆக 29, 2024 09:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : 'கூடலுாரில் காய்ந்து விழுந்த ஈட்டி மரங்களை கடத்தும் ஆபத்து உள்ளதால், வனத்துறையினர், அதனை ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலுார் பகுதி விலை உயர்ந்த ஈட்டி மரங்கள் வளரக்கூடிய முக்கிய பகுதியாகும். இதனால், இப்பகுதி 'ரோஸ்வுட்' கார்டன் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பெரும்பாலான ஈட்டி மரங்களை கடத்தல் கும்பல் ஏற்கனவே வெட்டி கடத்தி பெருமளவில் அழித்து விட்டது.

தற்போது, வன ஊழியர்கள் இரவு நேரங்களில் காட்டு யானைகளை கண்காணித்து விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், ஈட்டி போன்ற விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தப்படுவது குறைந்துள்ளது.

விழுந்து கிடக்கும் ஈட்டி மரங்கள்


இதனிடையே, தற்போது பெய்து வரும் பருவமழையில் வனப்பகுதி, அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள், தனியார் இடங்களில் காய்ந்த ஈட்டி மரங்கள், வேரோடு விழுந்து கிடக்கிறது.

அதில், கூடலுார், இரும்புபாலம் அருகே, பாண்டியார் டான்டீ சரகம் தேயிலை தோட்டத்தில் ஒரே இடத்தில் காய்ந்த பல ஈட்டி மரங்கள், வேரோடு விழுந்துள்ளன. அதில் வளர்ந்து வரும் 'ஆர்கிட்' செடிகளும் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த மரங்களை அப்படியே விடுவதால், இரவில் கடத்தல் கும்பல் வெட்டி கடத்தும் அபாயம் உள்ளது.

கடத்தினால் கடும் நடவடிக்கை


இதனை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மரங்களை வனத்துறை எடுத்து சென்று பாதுகாக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மக்கள் கூறுகையில்,'இப்பகுதியில் காய்ந்து விழுந்த ஈட்டி மரம் மற்றும் கிளைகள், கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டால், எஸ்டேட் நிர்வாகம் அல்லது தனியார் இடத்தின் உரிமையாளர் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர்.

இதனை தடுக்க, காய்ந்து விழும் ஈட்டி மரங்களை வனத்துறையினர் எடுத்து சென்று தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், அந்த மரங்களில் உள்ள ஆர்கிட் செடிகளை சேகரித்து ஜீன்பூல் தாவரம் மையம் போன்ற இடங்களில் வளர்க்க வேண்டும்,' என்றனர்.

வனத்துறையினர் கூறுகையில்,'கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருவதால் பல இடங்களிலும் கற்பூரம், ஈட்டி உட்பட பல்வேறு மரங்கள் விழுந்துள்ளன. இத்தகைய மரங்களை மீண்டும் ஆய்வு செய்து, ஈட்டி மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையில் யாராவது ஈட்டி மரங்களை கடத்தும் நோக்கில் செயல்பட்டால் வன சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us