sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மூதாட்டியை தாக்கி நகை பறித்த திருடன்

/

மூதாட்டியை தாக்கி நகை பறித்த திருடன்

மூதாட்டியை தாக்கி நகை பறித்த திருடன்

மூதாட்டியை தாக்கி நகை பறித்த திருடன்


ADDED : அக் 17, 2024 10:06 PM

Google News

ADDED : அக் 17, 2024 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : பந்தலுார் அருகே கொளப்பள்ளி பகுதியில், மூதாட்டியை தாக்கி நகை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பந்தலுார் அருகே கொளப்பள்ளி ரூபிமைன்ஸ் பகுதியை சேர்ந்தவர் அங்கம்மாள்-,77. இந்த மூதாட்டியின் கணவர் இறந்து விட்ட நிலையில், வீட்டில் தனியாக குடியிருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை, ஒரு துக்க வீட்டிற்கு சென்று வீடு திரும்பிய நிலையில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த ஒருவன், மூதாட்டி தலையில் தாக்கியுள்ளான். அதில் அங்கம்மாள் காயமடைந்து கீழே விழுந்துள்ளார்.

அப்போது முதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த. 3 பவுன் தங்க செயினை, பறித்துக்கொண்டு ஓடியுள்ளான். அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து, காயமடைந்த மூதாட்டியை பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சம்பவம் குறித்து தேவாலா டி.எஸ்.பி.,சரவணன், சப்--இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us