sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேயிலையில் கொப்புள நோயின் தாக்கம் குறைந்தும் மகசூல் இல்லை

/

தேயிலையில் கொப்புள நோயின் தாக்கம் குறைந்தும் மகசூல் இல்லை

தேயிலையில் கொப்புள நோயின் தாக்கம் குறைந்தும் மகசூல் இல்லை

தேயிலையில் கொப்புள நோயின் தாக்கம் குறைந்தும் மகசூல் இல்லை


ADDED : பிப் 07, 2025 08:14 PM

Google News

ADDED : பிப் 07, 2025 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; தேயிலை தோட்டங்களில் கொப்புள நோயின் தாக்கம் குறைந்தும், மகசூல் குறைவால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. கடந்த சில நாட்களாக, அவ்வப்போது காற்றுடன், மேகமூட்டமான காலநிலை நிலவி வருகிறது.

பெரும்பாலான தோட்டங்களில், கொப்புள நோயின் தாக்கம், இருந்து வருகிறது. இந்நிலையில், ஒரு வாரத்திற்கும் மேலாக வெயிலுடன், காற்று வீசி வருகிறது.

இதனால், தேயிலை தோட்டங்களில் கொப்புள நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

நோய் தாக்கிய இலைகள் காற்றில் உதிர்ந்து வருவதுடன், செடிகளில் பசுந்தேயிலை துளிர் விட துவங்கியுள்ளது.

தோட்டங்களில் ஈரப்பதம் குறைந்துள்ளால், மழை பெய்தால் மட்டுமே, மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 20 ரூபாய்க்கு குறையாமல் விலை கிடைப்பது, விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலாக உள்ளது. இனிவரும் இரண்டு மாதங்களில் வறட்சி அதிகரிக்கும் என்பதால், மகசூல் குறைய வாய்ப்புள்ளது.

இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us