sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கூடலுார் அரசு கல்லுாரியில் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை! சுற்றுச்சுவர் இல்லாததால் 'பார்' போல மாறிய வளாகம்

/

கூடலுார் அரசு கல்லுாரியில் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை! சுற்றுச்சுவர் இல்லாததால் 'பார்' போல மாறிய வளாகம்

கூடலுார் அரசு கல்லுாரியில் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை! சுற்றுச்சுவர் இல்லாததால் 'பார்' போல மாறிய வளாகம்

கூடலுார் அரசு கல்லுாரியில் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை! சுற்றுச்சுவர் இல்லாததால் 'பார்' போல மாறிய வளாகம்


ADDED : ஜன 07, 2025 11:50 PM

Google News

ADDED : ஜன 07, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுாரில், 15 ஏக்கர் பரப்பில் செயல்படும் அரசு கல்லுாரியில் சுற்றுச்சுவர் உட்பட போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

கூடலுார் ஆமைக்குளம் பகுதியில் உள்ள, பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் உறுப்பு கல்லுாரியை, 2003ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தொடர்ந்து, இக்கல்லுாரிக்கு கோழிப்பாலம் பகுதியில், வருவாய் துறை சார்பில், 15 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன. தொடர்ந்து, ஆமைக்குளம்; கோழிப்பாலம் ஆகிய பகுதிகளில் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.

கல்லுாரி-; விடுதியை பிரிக்கும் பொதுவழி


அதில், கோழிப்பாலம் கல்லுாரி வளாகத்தில், பல்கலைக்கழகம் சார்பில், 1.77 கோடி ரூபாய் செலவில் ஆசிரியர் மாளிகை கட்டடம் கட்டப்பட்டு, 2020 நவ., 6ல் திறக்கப்பட்டது. அந்த பராமரிப்பு இன்றி மூடி கிடக்கிறது.

இதனை ஒட்டி உள்ள, அரசு மாணவ, மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. கல்லுாரி-; விடுதிகள் உள்ள இடைப்பட்ட பகுதியில் உள்ள பொதுவழியை, மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். அதனால், அப்பகுதி பொது இடம் போன்று காணப்படுகிறது.

குறைந்து வரும் மாணவர் சேர்க்கை


இந்நிலையில், இக்கல்லுாரி, 2018--19ல் அரசு கல்லுாரியாக மாற்றப்பட்டது. ஆனால், கல்லுாரியை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால், உறுப்பு கல்லுாரியாக இருந்த போது, பயன்படுத்திய பழைய கம்ப்யூட்டர்கள், ஆய்வ உபகரணங்களை மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு ஆண்டுதோறும், 1000 மாணவர்களுக்கான சேர்க்கை நடந்து வந்தது. போதிய உட்கட்டமைப்பு வசதகிள் இல்லாததால், நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில், 60 சதவீதம் குறைந்துள்ளது.

முன்பு, கல்லுாரியில் சேர 'ஆன்லைனில்' விண்ணப்பித்த வெளியூர் மாணவர்கள் கல்லுாரியில் சேரவில்லை என்றால், கல்லுாரி நிர்வாகம் உள்ளூர் மாணவர்களை உடனடியாக அழைத்து 'அட்மிஷன்' வழங்கி வந்தது. ஆனால், நடப்பாண்டு இம்முறை பின்பற்ற படாததால், மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது.

இரவில் 'பார்' போல மாறும் வளாகம்


அரசு கல்லுாரி வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நுழைந்து, மது குடித்துவிட்டு மது பாட்டில்களை கல்லுாரி வளகத்தில் வீசி செல்வது தொடர்கிறது.

இதனால், மாணவ, மாணவியரை அனுப்ப பெற்றோர் அச்சப்படும் சூழல் தொடர்கிறது.

பெற்றோர் கூறுகையில், 'இந்த கல்லுாரியில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதற்கான நிதியும் அரசால் ஒதுக்கப்படவில்லை.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்ததை போன்ற அசம்பாவிதம் இங்கு நடக்க கூடாது.

எனவே, இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கல்லுாரியில் சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசு கல்லுாரிக்கு தேவையான உபகரணங்கள், ஆய்வகங்கள் அமைக்க வேண்டும். கல்லுாரியில் விழாக்கள் திறந்தவெளியில் நடைபெறுவதை தவிர்க்க, அனைத்து வசதிகளுடன் கூடி 'ஆடிட்டோரியம்' அமைக்க வேண்டும்,' என்றனர்.

கல்லுாரி முழுவதும் கேமரா அவசியம்...

கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணி கூறுகையில்,'' கல்லுாரிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவில் வெளிநபர்கள் நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், பல பகுதிகளில் மது பாட்டில்கள் காணப்படுகின்றன. இதனால், விடுதி மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே, சுற்றுச்சுவர் கட்டுவதுடன், கல்லுாரி முழுவதும் கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us