ADDED : பிப் 04, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்:செஞ்சேரிமலை கொங்கு குலாலர் பொது மடாலயத்தில், திருநீலகண்ட நாயனார் குருபூஜை நடந்தது.
சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரிமலை கொங்கு குலாலர் பொது மடாலயத்தில், 52ம் ஆண்டு, திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா, நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 8:30 மணிக்கு திருநீலகண்ட நாயனாருக்கும், ரத்தினாஜல அம்மையாருக்கும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. 10:00 மணிக்கு திருவீதி உலா, 11:00 மணிக்கு, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ மந்திரகிரி வேலாயுத சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.
சொற்பொழிவை, தொடர்ந்து, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மதியம், மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

