/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாரியம்மன் பூகுண்டம் திருவிழாவில் பக்தி பரவசம் பல்லாயிரக்கணக்கானோர் நேர்த்திக்கடன்
/
மாரியம்மன் பூகுண்டம் திருவிழாவில் பக்தி பரவசம் பல்லாயிரக்கணக்கானோர் நேர்த்திக்கடன்
மாரியம்மன் பூகுண்டம் திருவிழாவில் பக்தி பரவசம் பல்லாயிரக்கணக்கானோர் நேர்த்திக்கடன்
மாரியம்மன் பூகுண்டம் திருவிழாவில் பக்தி பரவசம் பல்லாயிரக்கணக்கானோர் நேர்த்திக்கடன்
ADDED : ஏப் 14, 2025 09:50 PM

குன்னுார், ; குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில், பூ குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர்.
குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா கடந்த, 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு, வி.பி., தெரு மார்க்கெட் பகுதியில் பூகுண்டம் திருவிழா நடந்தது. முன்னதாக தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் பவனி வந்தார். அதில், பக்தர்கள் சாட்டையில் அவர்களை அடித்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் பூ குண்டம் இறங்கினர்.போலீசார் உட்பட குழந்தைகளை சுமந்து, பலரும் குண்டம் இறங்கினர். பல்லாயிரக்கணக்கான மக்கள், உப்பு வீசி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். ஏற்பாடுகளை, மூன்று மதங்களின் சங்கத்தினர்; உபயதாரர்கள் செய்திருந்தனர்.
பல்வேறு அமைப்பினர் சார்பில், வி.பி., தெரு, விநாயகர் கோவில் உட்பட பல்வேறு இடங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விவேகானந்தர் நற்பணி மன்றத்தின் சார்பில், கூட்ட நெரிசலை தவிர்க்க பிரம்மாண்ட எல்.சி.டி., திரை வைக்கப்பட்டிருந்தது. இலவச மோர்பந்தல் அமைக்கப்பட்டது. இன்னிசை கச்சேரி நடந்தது. இன்று (15ம் தேதி) காலை 12:30 மணிக்கு, முக்கிய தேரோட்டம் நடக்கிறது. 18ம் தேதி முத்துப்பல்லக்கு, நடக்கிறது. மே, 9ம் தேதி, மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.