sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வனத்துறை கேட்டை சேதப்படுத்திய மூவர் கைது

/

வனத்துறை கேட்டை சேதப்படுத்திய மூவர் கைது

வனத்துறை கேட்டை சேதப்படுத்திய மூவர் கைது

வனத்துறை கேட்டை சேதப்படுத்திய மூவர் கைது


ADDED : ஜன 14, 2025 01:31 AM

Google News

ADDED : ஜன 14, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:

முதுமலை, மசினகுடி வன கோட்டம் மாயாறு சாலையில் நேற்று முன்தினம், அதிகாலை மசினகுடி சரக வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பூதநத்தம் அருகே, சீகூர் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் உள்ள, கேட் சேதப்படுத்தி இருப்பது தெரிய வந்தது. வன ஊழியர்கள் அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காரை வன ஊழியர்கள் நிறுத்தி, அதில் உள்ளவர்களிடம் விசாரணை செய்தனர். அவர்கள், கேட்டை உடைத்து வனப்பகுதிக்குள் சென்று வருவது தெரியவந்தது. அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

வனச்சரகர் தயானந்தன், காரை பறிமுதல் செய்து, அதிலிருந்த ராம்குமார், 23, மற்றும் 19, 20 வயதுடைய மூவரை கைது செய்தனர். விசாரணை நடந்து வருகிறது. வனத்துறையினர் கூறுகையில், 'அவர்கள் அதிகாலை நேரத்தில், வனத்துறைக்கு சொந்தமான கேட்டை சேதப்படுத்தி வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வனப்பகுதிக்குள் சென்று, வந்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியர்கள் அவர்களை கைது செய்தனர்,' என்றனர்.






      Dinamalar
      Follow us