sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊட்டி தோட்டக்கலை பூங்காக்களில் மூன்று மாதம் படப்பிடிப்புக்கு தடை கோடை சீசனுக்கு சுற்றுலா பயணியர் வருகை எதிரொலி

/

ஊட்டி தோட்டக்கலை பூங்காக்களில் மூன்று மாதம் படப்பிடிப்புக்கு தடை கோடை சீசனுக்கு சுற்றுலா பயணியர் வருகை எதிரொலி

ஊட்டி தோட்டக்கலை பூங்காக்களில் மூன்று மாதம் படப்பிடிப்புக்கு தடை கோடை சீசனுக்கு சுற்றுலா பயணியர் வருகை எதிரொலி

ஊட்டி தோட்டக்கலை பூங்காக்களில் மூன்று மாதம் படப்பிடிப்புக்கு தடை கோடை சீசனுக்கு சுற்றுலா பயணியர் வருகை எதிரொலி


ADDED : ஏப் 01, 2025 09:16 PM

Google News

ADDED : ஏப் 01, 2025 09:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட எட்டு பூங்காக்களில் மூன்று மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட சினிமா பட பிடிப்புகள் நடக்கிறது. அதில், நீலகிரியில் உள்ள தோட்டக்கலை பூங்காக்களில் கட்டண அடிப்படையில் சினிமா படபிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு சென்னையில் உள்ள தோட்டக் கலை இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும். அதன்பின், ஒரு நாளுக்கு அரசு தாவரவியல் பூங்கா, 50 ஆயிரம் ரூபாய் ; தேயிலை பூங்கா, 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பட பிடிப்புகளை நடத்தலாம்.

படப்பிடிப்புக்கு தடை


இந்நிலையில், ஊட்டியில் ஏப்., மே மாதங்களில் கோடை சீசன் நடக்கிறது. சீசனுக்கு வெளி மாநிலங்கள் , பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணியர் அதிகளவில் வருவது வழக்கம். இந்த காலக்கட்டகளில் பட படிப்பு நடத்தி, சுற்றுலாப் பயணியர் பாதிக்காமல் இருக்க, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உட்பட மாவட்டத்தில் உள்ள, 8 தோட்டக்கலை பூங்காக்களிலும் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''தோட்டக்கலைக்கு சொந்தமான பூங்காக்களில் சுற்றுலா பயணியர் எவ்வித பாதிப்பும் இன்றி பூங்காக்களை ரசித்து செல்லும் வகையில் ஏப்., மாதம் முதல் ஜூன் 30ம் தேதி வரை சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us